×

4 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மீனவர்களையும் அவர்கள் பயன்படுத்திய நாட்டுப்படகுடன்  காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் தமிழக அரசு  இலங்கையிடம் மன்றாடி அவர்களை விடுதலை செய்வதும் வாடிக்கையாக நிகழும் நிகழ்வாகிவிட்டது.

இந்நிலையில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு முதல் மீன்பிடித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் சிலரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களை அவர்கள் பயன்படுத்திய நாட்டு படகுடன் கைது செய்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrests ,fishermen ,Sri Lankan Navy ,Rameswaram , 4 Sri Lankan Navy, arrests ,Rameswaram Navy
× RELATED இலங்கை சிறையிலிருந்து...