×

கோட்டூர்புரம் பகுதியில் தீவிர பிரசாரம் பெண்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவேன்: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி முழுவதும் வீதிவீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கோட்டூர் பகுதியில் 172அ, 172, 171அ ஆகிய வார்டுகளில் நேற்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, சைதை கிழக்கு பகுதி செயலாளர் இரா.துரைராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கலிக்குன்றம், அம்பேத்கர் சிலை, திருவீதியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ஏரிக்கரை சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, சிஐடி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார். அப்போது, தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: தென்சென்னை தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். நீங்கள் அளிக்கும் உற்சாகமான வரவேற்பினால், நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கூறும் பிரச்னைகளை உன்னிப்பாக கேட்டு வருகிறேன்.

வேளச்சேரி ஏரியை தூர்வாருதல், மின்சார தகன எரிமேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். மெட்ரோ ரயில் திட்டம், குடிநீர் பிரச்னை, பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை செலுத்துவேன்.
திமுக இதுவரை சொன்னதைத்தான் செய்திருக்கிறது. செய்வதைத்தான் சொல்லி இருக்கிறது. ஆகவே, அந்த நம்பிக்கையுடன் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வாக்கு சேகரிப்பில் பொதுக்குழு உறுப்பினர் மகேஷ், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், வட்ட செயலாளர்கள் மணி, ராஜ்குமார், பழனி, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் எத்திராஜுலு, மாவட்ட மதிமுக செயலாளர் சுப்பிரமணி, விசிக பகுதி செயலாளர் சைதை ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu Thangapandian ,women ,Kotarpuram ,DMK ,area , Kotturpuram, women's safety, DMK candidate, Tamilachi Thangapandian,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...