×

பெரம்பூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்... துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை:  வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர்  அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பி.வி.காலனி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஏராளமானோர்  பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் மக்களின் தேவைகளையும், அடிப்படை பிரச்சனைகளையும் தீர்ப்பதிலும், மத்திய, மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதிலும்  சிறப்பாக பணியாற்றுவார்கள். அதிமுகவுக்கு துரோகம் செய்த 18 பேரில் ஒருவர் தான் இந்த பெரம்பூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக நிற்பவர். அவருக்கு நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். மக்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.  இந்த திட்டங்கள் தொடர இவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார். முன்னாள் அமைச்சர் மதுசூதனன் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency candidate ,O.Panniriselvam ,Perambur ,talks , Perambur constituency candidate,Deputy Chief Minister O.Panniriselvam talks
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு