×

சேலத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய ரவுடியின் கூட்டாளிகள் 50 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம்

சேலம்: சேலம் அருகே கோயில் வளாகத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடி கைது செய்யப்பட்ட நிலையில் 50 கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் சூரி என்ற சூரியமூர்த்தி (60). இவரது மகன்களான சிலம்பரசன், ஜீசஸ், குட்டியப்பன் ஆகியோரும் ரவுடி பட்டியலில் உள்ளனர். இவர்கள் மீது கொலை, வழிப்பறி, அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிலம்பரசன் 3 முறையும், ஜீசஸ் 2 முறையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரவுடி ஜீசசுக்கு பிறந்த நாளாகும். இதனை வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிட்ட அவர், கூட்டாளிகளை வரவழைத்து ராசிபுரம் காட்டுப்பகுதியில் உள்ள அல்லேரி முனியப்பன் கோயில் பகுதியில் கொண்டாடியுள்ளனர். 50க்கும்மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்த ரவுடி ஜீசஸ், 48 குவாட்டர், 24 பீர்பாட்டில்களை வாங்கிச்சென்றுள்ளார். சேலம் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ரவுடிகள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது கோயில் அருகிலேயே, 2 அடி நீளமுள்ள பட்டா கத்தியால் கேக்கை ரவுடி ஜீசஸ் அவரது அண்ணன் சிலம்பரசன், குட்டியப்பன் ஆகியோர்  வெட்டினர். பின்னர் அங்கேயே மதுகுடித்து குத்தாட்டம் போட்டனர்.இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இதனை தட்டிக்கேட்டவரை மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இந்த பிறந்த நாள் பார்ட்டியை அவருடன் சென்ற கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேலம் மாநகர போலீசார் தனிப்படை அமைத்து, ரவுடிகளான ஜீசஸ், அவரது அண்ணன் சிலம்பரசன், தம்பி மோசஸ் என்று குட்டியப்பன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ராசிபுரம் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் கத்தியுடன் கேக் வெட்டியதுடன் மதுகுடித்ததை தட்டிகேட்டவரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் ராசிபுரம் போலீசார் சிறையில் வைத்து ஓரிரு நாட்களில் கைது செய்வார்கள். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் அந்த குத்தாட்ட பார்ட்டியில் கலந்து கொண்ட ரவுடிகள், கல்லூரி மாணவர்கள் உள்பட 50 பேரை கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் எடுத்த வீடியோவை வைத்து ஆட்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. சேலத்தில் இருந்து மதுப்பாட்டில் வாங்கி சென்ற காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பாட்டுக்கு கத்தி டான்ஸ்

ரவுடி ஜீசஸ் பிறந்த நாள் கேக் வெட்டும் போது அவரது அண்ணன் சிலம்பரசன் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். 2 அடி நீள பட்டா கத்தியை கையில் வைத்திருக்கும் அவர், டான்ஸ் ஆடுவதற்கு பாடல் ஒளிபரப்பப்பட்டது. ‘சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அங்கேயே மதுவையும் குடித்து கொண்டாடிய காட்சிகள் வீடியோவில் வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrest ,associates ,Rowdy , Patta knife, cake, birthday, rowdy, arrest
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...