கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெரு திடலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: அதிமுகவும், பாஜவும் அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு சர்வாதிகார பாசிச ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். எனவே, அரசியல் அமைப்பு நமக்கு கொடுத்த உரிமைகளை பறிக்கும் அதிகாரம் முதல்வர் எடப்பாடிக்கும், பிரதமர் மோடிக்கும் கிடையாது.
ஏலம் முறையில் முதல்வரானவர் எடப்பாடி. ஸ்டெர்லைட் ஆலைக்கும், பாஜ, அதிமுகவுக்கும் என்ன உறவு?. அதிமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலை செலவு செய்கிறது. 35 ஆயிரம் போராட்டம் நடந்தது என்று கூறிய முதல்வர் எடப்பாடி, அதற்கான எந்த தீர்வையும் காணவில்லை. கல்லா கட்டுவதை தவிர வேறு எந்த தீர்வையும் முதல்வர் காணவில்லை. அதிமுகவை மிரட்டி பாஜ 5 இடங்களை பெற்றது. சோதனை என்ற பெயரில் அதிமுகவை பணிய வைத்தது. அதிமுக கூட்டணியானது கொள்ளை, கொலைகார கூட்டணியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி