×

டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் எஸ்டிபிஐ கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் 37 ேபர் திமுகவில் இணைந்தனர். எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டிடிவி.தினகரன் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சி, கோட்டக்கரை பகுதிகளை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில, மாவட்ட, பேரூர் நிர்வாகிகள் 37 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு முன்னிலையில் நேற்று முன்தினம் திமுகவில் இணைந்தனர். அவர்களை, மாவட்ட செயலாளர் கி.வேணு சால்வை அணிவித்து வரவேற்றார். திமுகவின் கொள்கைகளை அவர்களுக்கு விளக்கினார். இவர்களுடன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், ஒன்றிய துணை செயலாளர்கள் கே.இ.திருமலை, பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி ராமஜெயம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SDPI ,DMK , SDPI joined , DMK ,supported DD
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...