×

மாப்பிள்ளையுடன் தகராறு ; மணப்பெண் மாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கலைச்செல்வி (21). இவர், அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் வரும் 10ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கலைச்செல்விக்கும், அசோகனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், ‘தனக்கு திருமணம் வேண்டாம்’ என கலைச்செல்வி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி அருகில் உள்ள கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கலைச்செல்வி, இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணி கொடுத்த புகாரின்பேரில், மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : groom , Brides, Tiruvallur, marriage, bridal magic
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...