×

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்குகள்ள சந்தையில் டிக்கெட் விற்ற 3 வாலிபர்கள் கைது

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நாளை (6ம் தேதி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் 2 நாட்களுக்கு முன்பு விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில் அண்ணா சாலையில் சிலர் கள்ள சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி ஆய்வாளர் ஜானி செல்லப்பா நேற்று முன்தினம் அண்ணா சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தீனதயாளன் (23), ஆலந்தூரை ேசர்ந்த காதர் அலி (46), ராயப்பேட்டையை சேர்ந்த சாய் வெங்கட் (23) என்பதும், இவர்கள் ஐபிஎல் டிக்கெட்களை வாங்கி, அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 டிக்கெட்டுகள் பறிமுதல் ெசய்யப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,cricket tournaments ,IPL , IPL, cricket, market, ticket, 3 young people, arrested
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்