பாட்னா: மாட்டுத்தீவன வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு, ராஞ்சி சிறையில் உள்ளார். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் லாலுவின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘கரன்சி, வேலைவாய்ப்பு, மக்களின் சுதந்திரமான சிந்தனை போன்றவற்றுக்கு தடை ஏற்படுத்திவருக்கு, இந்த தேர்தலில் ஓட்டளிக்காமல் மக்கள் பாடம் புகட்டுவர்’’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி புதிய கோஷம் ஒன்றையும் சேர்த்துள்ளது. அதில், ‘நாம் செயலாற்றுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்’ என கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி