×

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்.க்கு இழப்பை ஏற்படுத்தி தொழிலதிபர் நண்பர்களின் நிறுவனங்களை வளர்க்கிறார்: மோடி மீது காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, பிரதமர் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களின் நிறுவனங்களை பிரதமர் மோடி வளர்ச்சி அடைய செய்கிறார்‘ என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 130 கோடி இந்திய மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமான இந்த 2 நிறுவனங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

2 நிறுவனங்களும் கடனில் தத்தளித்து வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களின் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை மூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்கள் மோடி ஆட்சியில் சீரழிக்கப்பட்டன.இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BSNL ,industrialist friends ,MNLL , BSNL , MTNL, Businessman, Cong , Modi ,Accusation
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...