சென்னை: தெலு ங்கு வருடப் பிறப்பு நாளில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏப்ரல் 6ம் தேதி (நாளை) தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை. இதையடுத்து அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கு மொழி பேசும் ஆசிரியர்கள், ஊழியர்கள் தவிர மற்றவர்கள் பணிக்கு வர வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு வருடப் பிறப்பு நாளில் ஊழியர்களை பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள செயல், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், அரசு உத்தரவை மீறிய செயலாக இருப்பதாகவும் தெலுகு சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி