×

இலங்கை படகுகளுடன் 11 சிங்கள மீனவர்கள் மீட்பு

கடலூர்: இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து நந்தசிங் என்பவருக்கு சொந்தமான விசைப்படகுகள் தங்கள் நாட்டு கடல் பகுதியில் மார்ச் 28ம் தேதி மீன்பிடிக்க கிளம்பின. அவற்றில் சுதாபுதா என்ற விசைப்படகில் திரிகோணமலை அஞ்சாகட்டு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் யாழ்ப்பாணம் ஆழ் கடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்தனர். இவர்களது படகில் கடந்த 1ம் தேதி திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்திய கடல் எல்லைக்குள் அடித்துச்செல்லப்பட்டது. இந்த தகவல் இலங்கை தூதரகம் மூலம் சென்னையில் உள்ள கடல் பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுமத்திடம் (எம்.ஆர்.சி.சி) தெரிவிக்கப்பட்டு அவர்களை மீட்க கோரப்பட்டது.

இதற்கிடையில் சுதாபுதா படகின் உரிமையாளர் மற்றொரு படகை, திரிகோணமலையை சேர்ந்த 5 பேருடன் அனுப்பினார். அவர்களது படகும் இந்திய கடல் எல்லைக்குள் வந்தது.  இந்நிலையில் நேற்று காலை விசைப்படகில் சென்ற தேவனாம்பட்டினம் மீனவர்கள் பழுதடைந்த சிங்கள படகு, தேடி வந்த படகை பார்த்து கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்தனர்.அதிகாரிகள் சென்று அவர்களை மீட்டு வந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sinhala ,fishermen ,Sri Lankan , Sri Lankan boat, 11 Sinhala fishermen
× RELATED இலங்கை சிறையிலிருந்து...