×

தண்ணீர் இல்லாததால் விவசாயி தற்கொலை

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சிக்கு செல்லும் பாதையில் நேற்று நாய்கள் மனித காலை கடித்து தூக்கி வந்தன. இதை பார்த்து அப்பகுதி மக்கள் மலையில் சென்று பார்த்தபோது முதியவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. தகவலறிந்து எஸ்.வி.மங்கலம் போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தது கருதன்கோட்டைபட்டியை சேர்ந்த ஆறுமுகம் (68) என்றும்,  விவசாயியான இவர் தென்னந்தோப்பில் மரங்கள் பட்டுப்போவதை தடுக்க ஒன்றரை ஆண்டுகளில் 10 இடங்களில் போர்வெல் போட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த மாதம் 9ம் தேதி  மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவில்லை. 25 நாட்களுக்கு பிறகு நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Farmer suicides , water
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...