மதுரை: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கி.மு.905 கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்பன் பரிசோதனையில் கி.மு.791 கால் பொருட்களும் கிடைத்துள்ளதாக மத்திய அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் தகவல் அளித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அடுத்தகட்ட அகழாய்வு பணிகளை மத்திய அரசுமேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசுக்கு அனுமதி தருமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி