மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் www.maduraimeenakshi.org என்ற இணையதளம் மூலம் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யும் பக்தர்கள் வாக்காளர் அடையாள அட்டை, கடவுசீட்டு வங்கி சேமிப்பு கணக்கு அட்டை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம், அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் விண்ணப்பங்கள் வரபெற்றால், குலுக்கள் மூலம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி