×

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்களுக்கு நீதி! : வித்தியாசமான வாக்குறுதியுடன் களம் இறங்கியுள்ள வேட்பாளர்

காந்திநகர் : ஏழ்மையை போக்குவோம், அடிப்படை வசதிகள் செய்து தருவோம் போன்ற வாக்குறுதிகளை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்து வருவார்கள். இந்நிலையில் மனைவியால் பாதிக்கபப்ட்ட கணவர்களுக்கு நீதிகிடைக்க செய்வோம் என்ற வித்தியாசமான வாக்குறுதியை முன்வைத்து ஒரு வேட்பாளர் களம் இறங்கியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிழக்கு தொகுதியில் மனைவியை எதிர்ப்போர் சங்கம் சார்பில் அதன் தலைவர் தசரத் தேவ்டா ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மனைவியாலும் அவரது உறவினர்களாலும் பாதிக்கப்பட்ட கணவர்களின் நலனை பாதுகாப்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கணவர்களை துன்புறுத்தும் மனைவிகளுக்கு சட்டப்பிரிவு 498 உதவுவதாகவும் தான் எம்பியானால் இதைத்திருத்த குரல் கொடுக்க போவதாகவும்  தேவ்டா கூறியிருக்கிறார். இதே வாக்குறுதியை வலியுறுத்தி ஏற்கனவே களம் இறங்கிய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர், 2300 வாக்குகளை பெற்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Husband Husbands ,candidate , Gandhinagar, Candidates, Wife, Husband, Dassaratda
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...