×

100வது கேட்சு பிடித்து வரலாற்று சாதனை நிகழ்த்த காத்திருக்கும் சிஎஸ்கே வீரர் ரெய்னா….!

சென்னை ; ஐ.பி.எல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை - சென்னை அணிகள் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 13 போட்டிகளிலும் சென்னை 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் கடைசியாக நடந்த 8 போட்டிகளில் மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில்தான் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். இன்று நடைபெறும் போட்டியில் ரெய்னா ஒரு கேட்ச் பிடித்தால் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் 100 கேட்சுகளைப் பிடித்த முதல் வீரர் என்ற சிறப்பைப் பெறவுள்ளார். தற்போது ரெய்னா 99 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.

இந்த லிஸ்டில் விக்கெட் கீப்பர்களே ரெய்னாவுக்குப் பின்னால்தான் இருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக் 96, தோனி 84 கேட்ச்களைப் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ரெய்னா 99 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 79, டி-வில்லியர்ஸ் 78 கேட்ச்களைப் பிடித்துள்ளனர். சென்னை, மும்பை, குஜராத் அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோ இன்றைய போட்டியில் ஒரு கேட்சைப் பிடித்தால் ரெய்னா, தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்காக 50 கேட்சுகளைப் பிடித்த வீரர் என்ற சிறப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Raina ,CKK ,catches , IPL, Super Kings, Suresh Raina, Gujarat
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...