×

ரபேல் புத்தகத்தை பறிமுதல் செய்தவர்கள் தேர்தல் பணியில் இருந்து விடுவிப்பு

சென்னை:  ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்,காவலர்கள் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உதவி செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தகத்தை பறிமுதல் செய்த 4 பேரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புத்தகம் தடை, பறிமுதல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael , Rafael Corruption, Police Assistant Inspector, Election Commission
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...