×

சென்னை புழல் சிறையில் இருந்த விசாரணை கைதி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழப்பு

சென்னை: சென்னை புழல் சிறையில் இருந்த விசாரணை கைதி மதியழகன் என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். புளியந்தோப்பைச் சேர்ந்த மதியழகன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மதியழகன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,prisoner ,Chennai Prison Jail , Chennai, Pulai prison, trial prisoner, breathing stroke
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு