சென்னை: விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் நீக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, சமீபகாலமாக சில நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்தக் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பி.சீனிவாசகம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர் கட்சி தலைமையின் மூலம், மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி