×

அசோக்நகர், கிண்டி பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை: சென்னை அசோக் நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் வயாதனவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள்  வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரித்த வந்தனர். இந்நிலையில், அசோக் நகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, சைதாப்பேட்டை ஆத்துமா நகரை சேர்ந்த  பழைய குற்றவாளி பீர்முகமது (எ) அசாருதீன் (20) என்பதும், மேற்கண்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், கடந்த ஜனவரி 24ம் தேதி மேற்கு மாம்பலம் ஜானகிராமன் தெருவை சேர்ந்த சாந்தி (53) என்பவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 சவரன் செயினை பறித்து சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 சவரன்  நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chain wrestler ,Ashok Nagar ,areas ,Gindi , Ashok Nagar, Gindi areas, Sequencer, chain, arrested
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்