×

ராகுல் காந்தி இன்னும் அமுல் பேபியாகவே இருக்கிறார்: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் விமர்சனம்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் அமுல்பேபியாக இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்ற தொகுதியை தொடர்ந்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவது ஆச்சியம் இல்லை என்றும் ராகுல் காந்தி பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். மேலும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ் அச்சுதானந்தன், தனது முகநூலில் ராகுல் காந்தி இன்னும் அமுல் பேபியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.கடந்த 2011-ம் ஆண்டு கேரள சட்டமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தியின் நடவடிக்கை முதிர்ச்சி பேராமல் இருந்ததால், அப்போது அமுல் பேபி என்று அழைத்ததாக தெரிவித்த அச்சுதானந்தன், நடுத்தர வயதை எட்டியுள்ள நிலையில் அவரது நடவடிக்கைகள் மாறவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amul Babu ,Rahul Gandhi ,Kerala Achuthanandan , Rahul Gandhi, Amul Baby, former Chief Minister of Kerala, Achuthanandan, Review
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...