திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 6ம் தேதி யுகாதி தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த நேரத்தில் மூலவர் சன்னதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உட்பட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட உள்ளது. பின்னர் மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வரும் 6ம்தேதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவையுடன் தொடங்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் புதிய வருட பஞ்சாங்கத்தை கோயிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷிதலு படித்து காண்பிக்க உள்ளார். யுகாதி ஆஸ்தானத்தையொட்டி அன்றைய தினம் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி