நெல்லை : அகிம்சையை வலியுறுத்தி நெடும் பயணம் மேற்கொண்டுள்ள குழுவினர் நெல்லை வந்தனர். ஆச்சாரியார் ஸ்ரீமகாஸ்ரமன் தலைமையில் 54 பெண்கள் மற்றும் 38 ஆண்கள் உள்ளிட்ட குழுவினர் நாடு முழுவதும் அகிம்சையை வலியுறுத்தி நெடும்பயணம் மேற்ெகாண்டுள்ளனர். இவர்கள் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய 3 நாடுகள் மற்றும் 19 மாநிலங்களில் சுமார் 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவினர் செங்குளம் வழியாக நெல்லை வந்தனர்.
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் முகாமிட்டு ஓய்வெடுத்து வருகின்றனர். இங்கிருந்து நெல்லையில் பல்வேறு இடங்களுக்கு சென்று அகிம்சையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டனர். பொதுமக்களிடம் நல்ல எண்ணத்தை பரப்புவது, நன்ெனறியை நடைமுறைப்படுத்துதல், போதை ஒழிப்பு போன்ற குறிக்கோள்களை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஆண்கள், பெண்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து நெல்லை மாநகரில் காலை மற்றும் மாலையில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி