மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக தேர்தல் பணிகுழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அலங்காநல்லூர் மற்றும் மேற்கு ஒன்றிய பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஒரு வாக்குச்சாவடி முகவருக்கு 25 வாக்காளர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் சூசகமாக தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் பேசுகையில், ‘‘இந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அதிகமாக இருப்பதால் நிர்வாகிகள் எதிர்பார்ப்பிற்கு தகுந்தவாறு என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை. நீங்கள் எதிர்பார்த்து வந்த விஷயம் வரவேண்டிய நேரத்தில் வரும். தேர்தல் பணிகளில் தொய்வின்றி பணியாற்றி தேனி மக்களவை வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை வெற்றி பெற செய்யவேண்டும். தேனியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் தேனி தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி