×

குண்டூரில் பஸ் பிரசாரத்தின்போது துணிகரம் ஜெகன் மோகனின் சகோதரி மோதிரத்தை உருவிய நபர்

குண்டூரில் பஸ் பிரசாரம் மேற்கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவின் தங்க மோதிரத்தை மர்மநபர் திருடி சென்றார். ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா பஸ் யாத்திரை மேற்கொண்டு அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று  குண்டூரில் பஸ்சில் இருந்தபடி ஷர்மிளா பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர், பிரசாரத்தை முடித்துக் கொண்டு பஸ்சில் புறப்பட இருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு கை கொடுத்த படி சென்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் ஷர்மிளா கையை பிடித்தபடி அவர் அணிந்திருந்த மோதிரத்தை பிடுங்கி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, கூட்டத்தில் யாரோ எனது மோதிரத்தை எடுத்துவிட்டார்கள் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக அங்கிருந்து சென்றால் போதும் என்ற நிலைக்கு வந்த ஷர்மிளா  உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jegan Mohan ,bungalow , bus campaign, Kundur, Jegan Mohan
× RELATED கருங்குழி பேரூராட்சியில் ரூ.78 லட்சத்தில் தார் சாலை சீரமைப்பு