×

சென்னையில் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர்: பல்வேறு தரப்பினர் கண்டனம்

சென்னை: சென்னையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் அடித்து நொறுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போர் நினைவுச்சின்னம் எதிரே இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் ரோந்து வாகனந்தில் வந்த காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தடியால் அடித்து நொறுக்கினார்.

வான உரிமையாளர் எவ்வித வாக்குவாத்திலும் ஈடுபடாமல் இருசக்கரத்தை எடுத்து சென்றார். இருசக்கரத்தை வாகனத்தை காவலர் ஒருவர் அடித்து நொறுக்கும் போது உதவி ஆய்வாளர் ஒருவரும் உடனிருந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் கேட்டபோது, கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா வாங்க முயன்றதாகவும் பலமுறை கூறியும் செல்லவில்லை என்பதால் அவர் வாகனத்தை தாக்கியதாக தெரிவித்தார். எனினும் இருசக்கரத்தை வாகனத்தை காவலர் அடித்து நொறுக்கியதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Defender ,Chennai , Chennai, bicycle, guards, condemned
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...