×

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவம்: கவிதையால் பதிலடி தந்த விமானப் படைத் தளபதி

டெல்லி: புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் போதவில்லை என்று இந்தியா அளித்த ஆதாரங்களை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இது குறித்து எதிர்வினையாற்றிய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர்மார்ஷல் தனோவா, பாகிஸ்தான் கேட்கும் ஆதாரம் அதன் கண்முன்னே இருப்பதாக தெரிவித்தார். “உன் கண்முன்னே இருப்பதைப் பார்க்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறாய், ஆனால், அது காற்றில் வெடித்து உன் கண் முன்னே சிதறுகிறது” என்ற பிரபல பாப் பாடகர் பாப் டைலனின் கவிதை வரியை அவர் மேற்கோள் காட்டினார்.

இந்திய விமானப் படையின் மிராஜ் விமானங்கள் பாலக்கோட்டில் மூன்று இலக்குகளைக் குறிவைத்தன. இஸ்ரேல் தயாரிப்பான ஸ்பைஸ் 2000 குண்டுகள் அந்த இலக்குகள் மீது வீசப்பட்டன. ஒவ்வொரு வெடிகுண்டும் 80 கிலோ வெடிப்பொருள் அடங்கிய 900 கிலோ எஃகுவுடன் தயாரிக்கப்பட்டது. வீசப்பட்ட குண்டுகள் கட்டடங்களை வெடித்துச் சிதறடித்ததாகவும், உள்ளே இருந்த யாரும் உயிருடன் தப்பவில்லை என்றும் விமானப்படை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,Pulwama ,Commander ,Air Force , 40 killed ,Pulwama attack,Air Force ,Commander
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...