×

சிறுமி பலாத்கார வழக்கில் சிவில் சப்ளை அதிகாரி கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் சிறுமி பலாத்கார வழக்கில் சிவில் சப்ளை அதிகாரியை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, எண்ணூர் காவல் ஆய்வாளர், பாஜ பிரமுகர், ஓய்வுபெற்ற மருத்துவ பேராசிரியர், தொழிலதிபர்கள், டிவி நிருபர், மாநகராட்சி ஊழியர் மற்றும் புரோக்கர்கள் என 30க்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்து  புழல் சிறையில் அடைத்துள்ளனர்.தொடர் விசாரணையில், சிவில் சப்ளை அதிகாரி கண்ணன் (53) என்பவர் சிறுமி பலாத்கார வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்த இவர் சைதாப்பேட்டையில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிவில் சப்ளை அலுவலகத்தில் சீனியர் எக்சிகியூட்டிவ் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post சிறுமி பலாத்கார வழக்கில் சிவில் சப்ளை அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Vannarpettai ,Vannarappeta ,Dinakaran ,
× RELATED துணிக்கடையில் தீ விபத்து