×

படப்பிடிப்பின் போது சோகம்; ஷுட்டிங் பார்க்க வந்த தாய், மகள் பலி; ஒருவர் படுகாயம்

பெங்களூரு: பெங்களூரு அருகே கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து தாயும், மகளும் உயிரிழந்தது குறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா சேத்தன் நடிப்பில் கன்னட படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகே உள்ள பாகலூரில் நடைபெற்றது. காட்சி அமைப்பின் படி கார் மோதி தீப்பிடிப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்த சுமைரா என்ற இளம் பெண்ணும், 8 வயதான அவரது மகள் ஆயிராவும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பாகலூர் போலீசார் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், சண்டை காட்சி இயக்குநர், உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : filming , Bengaluru, shooting, accident, cylinder accident, police investigation, 2 dead
× RELATED டோலிவுட்டில் படப்பிடிப்புகள்...