×

5 லட்சம் கடனை கேட்க சென்ற தனியார் கட்டுமான நிறுவன அதிபர் கொலை: சொகுசு காரில் சடலம் மீட்பு..சேலையூரில் பயங்கரம்

சென்னை: கீழ்கட்டளையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன அதிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர், அகரம்தென், அன்னை சத்யா நகரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததாக நேற்று மதியம் சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலையூர் காவல் நிலைய போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த சொகுசு காரில் ஆண் சடலம் ஒன்று இருந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்த நபர் கீழ்கட்டளை, அருள்முருகன் நகர் விரிவு, நான்காவது தெருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன அதிபர் பழனிசாமி (42) என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், பழனிசாமியை கொலை செய்ததாக சேலையூர், கஸ்பாபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம் (27) மற்றும் மாரிமுத்து (38) ஆகிய இருவரும் சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில், சரணடைந்த இருவரும் பழனிசாமியிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.5 லட்சத்தை கடனாக பெற்று இருந்ததாகவும், அந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக நேற்று பழனிசாமி சேலையூர் அருகே வந்து இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த இருவரும் பழனிசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்தனர்.  மேலும், இந்த கொலையில் வேறு சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : luxury car owner ,death , 5 lakh loan, chancellor murder, luxury car
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...