×

பிரெக்சிட் மீதான வாக்கெடுப்பு 3-வது முறையாக படுதோல்வி; இங்கிலாந்து ஆளும் அரசுக்கு சிக்கல்

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டுவந்த பிரெக்சிட் மீதான வாக்கெடுப்பு 3-வது முறையாக தோல்வி அடைந்துள்ளது. பிரெக்சிட் மசோதாவுக்கு ஆதரவாக 58 பேரும், எதிராக 286 பேரும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து 3-வது முறையகா பிரெக்சிட் மசோதா தோல்வியடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016ம் ஆண்டு நடந்தது. இதில், பெரும்பாலான பொதுமக்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வாக்களித்தனர்.

இதன்படி, வரும் மார்ச் 29ம் தேதிக்குள் இங்கிலாந்து வெளியேற வேண்டும். இதுதொடர்பாக, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தி பிரக்சிட் ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளார். இந்த ஒப்பந்தத்தால் இங்கிலாந்து பெரும் எதிர்விளைவுகளை சந்திக்க இருப்பதாக, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களும் தெரசா மேவின் ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்.

இந்நிலையில், பிரக்சிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 2 முறை தோல்விடையந்தார் தெரசா மே. இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில் அரசு கொண்டு வந்த தீர்மானம் படுதோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை. இதன் காரணமாக தெரசா மே அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மசோதா மீண்டும் இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே தாக்கல் செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,UK , UK, Prime Minister Teresa May, Precision Resolution
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு;...