×

புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதி புனேயில் கைது

புனே: புல்வாமா தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் ஒருவனை தீவிரவாத தடுப்புப்படை போலீசார் நேற்று புனேயில் கைது செய்தனர். கடந்த மாதம் 14ம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவப் படை வீரர்களின் வாகன அணிவகுப்பு மீது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை தற்கொலை தீவிரவாதி ஒருவன் மோதச் செய்து நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. 3நாட்களுக்கு முன்பு பீகார் மாநில தீவிரவாத தடுப்புப்படை போலீசார், வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய கைரூல் மண்டல் மற்றும் அபு சுல்தான் ஆகிய இரண்டு பேரை பாட்னாவில் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களின் மற்றொரு கூட்டாளி ஷரியத் மண்டல்(19) என்பவன் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள சக்கான் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டான். அங்கு அவன் ஒரு கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை ஷரியத் மண்டல் பீகாருக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,Pulwama ,Pune , Pulwama attack, terrorist, Pune, arrested
× RELATED பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும்...