×

டிடிவி தினகரனிடம் குப்பை கொட்ட முடியாது: நாஞ்சில் சம்பத் பேட்டி

தஞ்சையில் நாஞ்சில் சம்பத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்தியில் மோடி ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். மத்தியில் மட்டுமின்றி தமிழகத்தில் மோடிக்கு எடுபிடியாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கும் விடை கொடுக்க தீர்மானித்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அதிகார திமிரில் பிரசாரம் செய்கிறார்.

21 தொகுதிகளில் தேர்தல் நடத்தினால் தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் நடக்கும் அடிமை ஆட்சி கவிழும் என்பதால் தேர்தல் கமிஷனை கைப்பாவையாக பயன்படுத்துகின்றனர். தேர்தல் முடிவு சூரியன் உச்சத்துக்கு வந்துள்ளதை அனைவருக்கும் உணர்த்தும்.  அமமுக என்பது கட்சி இல்லை. அது ஒரு கும்பல் கலாசாரம். நம்பி வந்தவர்கள் நட்டாற்றில் விடப்படுவர். டிடிவி தினகரனிடம் குப்பை கொட்ட முடியாது. இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,Nanji ,Sampath , TTV, Nanjil Sampath
× RELATED சாக்கடை வடிகால் பணிக்காக...