×

வழக்கறிஞருக்கு 3 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வக்கீல்களின் பதவி தொடர்பான விவகாரத்தின்போது வக்கீல் மேத்யூஸ் நெடும்பாரா நீதிபதிகள் குறித்து கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து  அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறிய நீதிபதிகள் அமர்வு அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் மேத்யூஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். உச்ச நீதிமன்றம் அல்லது மும்பை உயர் நீதிமன்றத்தில் எந்த நீதிபதியையும் இதுபோன்று குறிப்பிடமாட்டேன் என அவர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து  நீதிபதிகள்  நாரிமன், வினீத் சரண் ஆகியோர் வக்கீலுக்கு வழங்கிய 3 மாத சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.எனினும் மேத்யூஸ் நெடும்பாரா ஒரு ஆண்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்யக்கூடாது என நீதிபதிகள் தடை விதித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attorney ,Supreme Court , lawyer, 3 months,Supreme Court, action
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...