×

கொடநாடு கொலை வழக்கு மனோஜ்சாமிக்கு ஜாமீன்

ஊட்டி:   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதி உள்ளே நுழைந்த கும்பலினர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   நேற்றைய விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் ஆஜராகினர். வழக்கை நீதிபதி வடமலை விசாரித்தார். பின்னர் அடுத்தகட்ட விசாரணையை ஏப்.10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனைதொடர்ந்து, நீதிபதியின் அனுமதியுடன் தனது வக்கீலுடன் சயான் சிறிது நேரம் பேசினார். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனோஜ் சாமியை நீதிபதி ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad , Kodanad murder case, Manojsami, bail
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை