சென்னை: திருவள்ளூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அம முக வேட்பாளர் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்ராஜா கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.அங்கிருந்து எவ்வித அனுமதியும் இன்றி தேர்தல் விதிகளை மீறி கட்சிக்கொடியுடன் ஊர்வலமாக சென்றதாக, வேட்பாளர் பொன்ராஜா உட்பட 50 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி