×

‘க.காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை தீர்த்து கட்டினோம்’: க.காதலனுடன் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ேதாம் என்று கள்ளக்காதலனுடன் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுராந்தகம் அடுத்த சிறுதாமூரை சேர்ந்தவர் முருகன் (29). விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவரும், மறைமலைநகர் அடுத்த மட்டான் ஓடை கிராமத்தில் உள்ள சாந்தகுமார் என்பவரது பண்ணை தோட்டத்தில் வேலை செய்கின்றனர். அங்கேயே ஒரு குடிசையில் தங்கியுள்ளனர். இவர்களுடன், விழுப்புரம் அடுத்த கண்டரசேரி கிராமத்தை சேர்ந்த சிவா (29) என்பவரும், பண்ணையில் தங்கி தோட்ட வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி பண்ணையின் ஒரு பகுதியில், முருகன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து பண்ணை வீட்டின் உரிமையாளர் பார்த்தசாரதியிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது, பண்ணையில் வேலை செய்து வந்த சிவாவை காணவில்லை. அதே நேரத்தில் முருகன் கொலை செய்யப்பட்டது பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் மஞ்சுளா சாதாரணமாக இருந்துள்ளார். இதனால் மஞ்சுளா மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். இதில் மஞ்சுளாவும், சிவாவும் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிந்தது. போலீசாரிடம் மஞ்சுளா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு: சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தை சேர்ந்த சிவா என்பவர் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலமாக மாறியது. எனது கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் ஜாலியாக இருந்தோம். சில நேரங்களில் எனது கணவரை பொருட்கள் வாங்க மதுராந்தகத்துக்கு அனுப்பி விட்டு ஜாலியாக இருந்தோம். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவர, சிவாவை கண்டித்தார். என்னை அடித்து உதைத்தார். ஆத்திரம் ஏற்பட்டது. எனது கணவர் இருக்கும்வரை, ஜாலியாக இருக்க முடியாது, அதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று நானும் சிவாவும் முடிவு செய்தோம்.

அதன்படி எனது கணவருக்கு மது வாங்கி கொடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை பண்ணை வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வீசினோம்.இவ்வாறு மஞ்சுளா கூறினார். இதையடுத்து மஞ்சுளா மற்றும் அதே பகுதியில் பதுங்கியிருந்த சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : husbands ,K.Kathal , 'K. Kathal, the prison wife, confess
× RELATED ‘மருதமலை’ படத்தில் வரும் வடிவேல்...