×

பாஜ.வில் சீட் தராததால் அதிருப்தி சத்ருகன் சின்கா நாளை காங்கிரசில் இணைகிறார்: பாட்னா சாகிப்பில் போட்டியிட வாய்ப்பு

பாட்னா:  பாஜ எம்பி.யான சத்ருன் சின்கா, நாளை காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல் வௌியாகி உள்ளது. பாலிவுட் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சத்ருகன் சின்கா. இவர் பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் பாஜ சார்பில் இரண்டு முறை போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வானவர். கடந்த சில மாதங்களாக இவர் பாஜ.வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், இம்முறை அவருக்கு போட்டியிட பாஜ வாய்ப்பு அளிக்கவில்லை.  பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்தியுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள அதிருப்தியில், காங்கிரசில் சத்ருகன் சின்கா நாளை  இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பீகார் மாநில காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறுகையில், சத்ருகன் சின்கா டெல்லியில் மார்ச் 28ம் தேதி (நாளை) காலை காங்கிரசில்  இணைக்கிறார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக பாட்னா சாகிப் தொகுதியில்  நிறுத்தப்படுவார் என்றார். இதேபோல், சமீபத்தில் பாஜ.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்துக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shatrughan Sinha ,Congress ,BJP ,Patna Sahib , Shatrughan Sinha, Congress, BJP, Patna
× RELATED காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை...