×

போலி நகை கொடுத்து மோசடி 4 வடமாநிலத்தவர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வஉசி நகர் மார்க்கெட் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் நவரத்தன்சிங் (47). நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த ஒரு ஜோடி, பழய நகையை விற்று புதிய நகை வாங்க  வேண்டும் என்று கூறி போலி நகைகளை கொடுத்து 6 கிராம் செயினை வாங்கி சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து டெல்லி மீட்நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (31) கிஷன்லால் (69), சோனுகுமார் (26), இவரது மனைவி லதா (26) ஆகியோரை கைது செய்து 10 ஜோடி  கம்மல், 10 கிராம் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

* திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராயப்பேட்டை மாயாண்டி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (22) நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
* கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகளை மிரட்டி பணம் பறித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சரண் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* கொருக்குப்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலம், ₹5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மதியழகன் (30), வான்மதி, ஆகியோரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Northman , Fake jewelry ,fraud, 4 Northman ,arrested
× RELATED தேனி – போடி அருகே துவக்கப் பள்ளியில்...