×

வாசனிடம் ஜெயவர்தன் வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி யிடும் ஜெயவர்தன், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.  அதன்படி, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசனை, நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், ஜெயவர்தன் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் வி.என் ரவி, தி.நகர் சத்யா, பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன் மற்றும் தமாகா நிர்வாகிகள் கோவை தங்கம், முனவர் பாட்சா, யுவராஜா, கொட்டிவாக்கம் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு பல்லைக்கலை கழகத்தை மூட மத்திய அரசு முடிவு எடுத்ததை தடுத்து நிறுத்தினேன். மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டேன். நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைத்தேன். இதனால் அந்த பல்கலைக்கழகம் தற்போது செயல்பட்டு வருகிறது. கிண்டியில் உள்ள சிப்பெட் பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்தபோது நாடாளுமன்றத்தில் மத்திய, ரசாயனத்துறை அமைச்சர்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தியதால், அந்த பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் கிண்டியில் செயல்பட்டு வருகிறது.
முதியோர் சிகிச்சை தேசிய நிறுவனம் நாடாளுமன்ற தொகுதியில் அமைக்க தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், சுகாதாரத்துறை அமைச்சரையும் வலியுறுத்தியதால் ரூ.110 கோடி மதிப்பில் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஜெயவர்தன் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Greetings ,Vasanan Jayawardena , Greetings, Vasanan, Jayawardena
× RELATED தேவநேய பாவாணர் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து