×

நியூசி., மசூதி தாக்குதலுக்கு பழி தீர்க்க தீவிரவாதிகள் திட்டம் : டெல்லி, மும்பை, கோவாவில் தீவிர கண்காணிப்பு

டெல்லி: நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் யூதர்கள் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸலாமிக் ஸ்டேட் , அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து டெல்லி, மும்பை, கோவாவின் சில பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சில மாநில அரசுகளை எச்சரித்துள்ள உளவுத்துறை நியூசிலாந்தில் 2 மசூதிகளில் புகுந்து அங்கிருந்தவர்களைக் கொன்றதற்கு பழி தீர்க்கும் வகையில் பதிலடித் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள யூதர்கள் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிடலாம் என்பதால், டெல்லி, மும்பை, கோவா உள்ளிட்ட இடங்களில் பிரபலமாக விளங்கும் யூத வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வழக்கமான துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுதங்களின்றி கார், லாரியைக் கொண்டு மோதச் செய்தல், கத்தியால் தாக்குதல் உள்ளிட்ட வகையில் தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திலும் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Delhi ,Terrorists ,mosque attack ,Mumbai ,Goa ,Delhi , New Zealand, Jews, Religions, Threats, Threats
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...