×

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் மர்மப்பொருள், வெடிகுண்டா என நிபுணர்கள் சோதனை

தஞ்சை : தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு கிடக்கும் மர்மப்பொருளை காவல்துறையினர் சோதனை செய்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி 3வது கேட் பகுதியானது பொதுமக்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை மருத்துவக்கல்லூரிக்குள் செல்ல கூடிய ஒரு பாதையாகும். இந்த கேட் அருகே மர்ம பொருள் ஒன்று மூட்டை போல கிடந்துள்ளது.

அதிலிருந்த சில திரிகள் வெளியே இருந்ததை கண்ட பொதுமக்கள் அது வெடிகுண்டாக இருக்கலாம் என்று கருதி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி கேட் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் இயந்திரங்களுடன் சோதனை நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Experts ,field ,bomb explosion ,Tanjai Medical College , Tanjore, Medical College, Bomb, Public, Specialists
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது