×

கத்திப்பாரா மேம்பாலமே எனது பணிக்கு சான்று நங்கநல்லூர் பகுதியில் டி.ஆர்.பாலு பிரசாரம்

ஆலந்தூர்: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட  மவுளிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆலந்தூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள திமுக மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில்  சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன் ஆகியோர் உடன் இருந்தனர். பிரசாரத்தின்போது, வேட்பாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது: நான், நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை நிறைவேற்றித்தந்துள்ளேன். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஒன்றே எனது பணிக்கு சான்று. 5 ஆண்டு காலம் அதிமுக  எம்பிக்கள் ஒன்றும்  செய்யவில்லை. நமது தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லா தலைவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக உள்ளார்.  

அவர் தலைமையின் கீழ் பணியாற்றுவதில் நான் பெருமையடைகிறேன். அவர் தலைமையில்  உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட நிர்வாகிகள், இப்ராஹிம், ஜெயராம் மார்த்தாண்டம், எஸ்.ரத்தினம், உலகநாதன்,  எம்.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜ், பாபு, ஏசுதாஸ், கே.பி.முரளிகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள், நாஞ்சில் பிரசாத்,  என்.சீதாபதி, எஸ்.சிக்கந்தர், சபீக்அகமது, மதிமுக சின்னவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சீராளன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TRP ,area ,Nanganallur , Kathiapara , proof, work, Nanganallur, TRB's campaign
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...