×

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பில்லாத பஞ்சாப் தேர்தல்: காங்., பாஜ, அகாலிதளம், ஆம்ஆத்மி கட்சியினர் அதிர்ச்சி

சண்டீகர்: பஞ்சாப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரசாரம் இல்லாதது அதிசயமாக உள்ளது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான், மிக அதிகளவில் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். வெளிநாடுவாழ் இந்தியர்களான இவர்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், தங்களின் பங்களிப்பை அரசியல்  கட்சியினருக்கு வழங்கி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, வெளிநாடுகளில் நிதி திரட்டும் கூட்டங்களை நடத்தினர். அங்கு நிதியை திரட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கட்சியினருக்கு  வழங்கினர். மேலும், சமூக வலைதளங்களிலும் அதிகளவு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை தருவோம் எனக்கூறி கடந்த 2014 மக்களவை தேர்தலில் களத்தில் குதித்த ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அதிக ஆதரவு கொடுத்தனர். ஆனால், தற்போது நடக்கும் மக்களவை  தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். இது பஞ்சாப் மாநில தேர்தல் களத்தில் அதிசயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Punjab Elections ,Individuals ,Akali Dal , Overseas Indians, Non-Participating ,Punjab Election, Cong, Bhaj, Akali Dal, Amidst
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!