×

விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்வார் தேமுதிக தேர்தல் அறிக்கை இல்லை: பிரேமலதா பேட்டி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் நிச்சயமாக பங்கேற்பார் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை 4 மணி விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார், முன்னதாக. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேமுதிக 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. நாங்கள் தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் எங்களது கூட்டணி கட்சிகளான பாஜ, அதிமுக தேர்தல் அறிக்கையில் அவர்கள் கொடுத்த  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார். நான் வரும் 27ம் தேதி முதல் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். தூத்துக்குடியில் 2 முக்கிய கட்சிகளில் 2 பெண்கள்  போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டி. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தற்போது கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்து கொள்ள செல்கிறேன் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,election ,interview ,Prema Pratibha , Vijayakanth,election ,campaign, report,Premalatha interview
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...