×

வேற கட்சிக்கு போறீங்களா... அம்மா ஆவிசும்மா விடாது: அமைச்சர் பாஸ்கரன் சாபம்

சீட் கிடைக்காமல் வேறு கட்சி சென்றவர்களை அம்மா ஆவி சும்மா விடாது என அமைச்சர் பாஸ்கரன் சாபம் விட்டு பேசியது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜ வேட்பாளர் எச்.ராஜா அறிமுகக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில்,  ‘‘சிவகங்கை, மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி கட்டளையிட்டுள்ளார். பூத் கமிட்டி வேலையை சரியாக  பார்க்க வேண்டும். முதல்வர் எடப்பாடி மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை செய்துள்ளார்.

எச்.ராஜா வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆனவுடன்  தொகுதி வளர்ச்சிக்கு அனைத்து திட்டங்களும் செய்யப்படும். சீட் கிடைக்காமல் வேறு கட்சிக்கு சென்றவர்களை அம்மாவின் ஆவி சும்மா விடாது’’  என்றார்.‘அப்செட்டா நானா... நோ... நோ...’:  சிவகங்கை சிட்டிங் எம்பி செந்தில்நாதன் பேசுகையில், ‘‘சீட் கிடைக்காததால் நான் அப்செட்டாக உள்ளேன் என அமமுகவினர் பொய் பிரசாரம்  செய்கின்றனர். வாட்ஸ்அப்பில் வருவதை யாரும் நம்ப வேண்டாம். முதல்வர் வாக்கு சேகரித்து பேச சிவகங்கை தொகுதிக்கு வர உள்ளார்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,Minister , அமைச்சர் பாஸ்கரன் ,சாபம்
× RELATED அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி...