×

மாற்றம் தரும் ஆண்டு இது: வைகோ நம்பிக்கை

இந்த ஆண்டு மாற்றத்திற்கான ஆண்டாக அமையும். தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்றி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ என்று வைகோ  நம்பிக்கையோடு கூறினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான வெற்றி  கூட்டணி 40 தொகுதிகளிலும்  வெற்றி பெறும். ஜனநாயகமா, பாசிசமா என்பதை தேர்தலில் மக்கள் நிச்சயமாக நிரூபிப்பார்கள். ஜனநாயகத்தை காக்க  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்.

இந்த ஆண்டு மாற்றத்திற்கான ஆண்டாக அமையும். தமிழகத்தில் ஊழல்  ஆட்சியை அகற்றி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இன்று முதல் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் கனிமொழியை ஆதரித்து, தூத்துக்குடி  மாவட்டம், திருவைகுண்டம், விளாத்திகுளம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளேன். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து ஏப்.16ம் தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளேன். 7 பேர் விடுதலை குறித்து சுப்பிரமணியசுவாமி சொல்வது அவரது சொந்த கருத்து. இவ்வாறு  அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaiko , Vaiko
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...