சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட வி.ஐ.பி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரம் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரம் வருமாறு: பொன்.ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரி தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் ரொக்கமாக கையில் இருப்பது 48,580. வங்கியில் இருப்பு - 50 லட்சத்து 56 ஆயிரத்து 298 விவசாய நிலம் மதிப்பு - 2 கோடியே 51 லட்சத்து 26 ஆயிரத்து 501. மற்ற நிலங்களின் மதிப்பு - 4 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 954. வணிக கட்டிட மதிப்பு - 8 லட்சத்து 25 ஆயிரத்து 700. மொத்த மதிப்பு - 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 ஆகும். கடந்த 2014 தேர்தலின் போது பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்த மொத்த மதிப்பு - 3 கோடியே 99 லட்சத்து 70 ஆயிரத்து 283. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி(தர்மபுரி): அன்புமணி பெயரில் அசையும் சொத்து 33,64,543 எனவும், அசையா சொத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் அசையும் சொத்து 9,47,22,445ம், அசையா சொத்து 23,37,57,019 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் மொத்தம் 7,26,81,681ம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து விபரம்: அசையும் சொத்து மனைவி பெயரில் 7,49,21, 121ம், அசையா சொத்துக்கள் 26,27,93, 500 என கூறப்பட்டிருந்தது. மேலும் அன்புமணி மீது மருத்துவக்கல்லூரி உரிமம் புதுப்பிப்பதில் முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ தொடர்ந்துள்ள 2 வழக்குகள் உட்பட மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதிஷ் (கள்ளக்குறிச்சி): 2014 ஆம் ஆண்டில் அசையும் மற்றும் அசையா சொத்து 33.91 கோடி இருந்ததாகவும், அது இப்போது 60.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து 3.93 கோடியில் இருந்து 337% உயர்ந்து 17.18 கோடியாகவும் அசையா சொத்து மதிப்பு 29.97 கோடியில் இருந்து 42.99 கோடியாக அதிகரித்துள்ளது. சுதீஷுக்கு 17.52 கோடி கடன் உள்ளது. எம்.எஸ்.எம்.ஆனந்தன்: திருப்பூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.