×

பொள்ளாச்சியில் சிபிசிஐடி போலீசார் முகாம் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களிடம் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிபிசிஐடி போலீசார் பொள்ளாச்சியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரிடம் இருந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் பாலியல் பலாத்கார வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கடந்த 12ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பாலியல் வழக்கில் முதல் குற்றவாளியான திருநாவுக்கரசை, சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து, தொடர்ந்து 4 நாட்களாக விசாரணை நடத்தினர். அப்போது திருநாவுக்கரசிடம் இருந்து, சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் வாங்கினர்.

தொடர்ந்து அவரது கூட்டாளிகளான சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரிடமும், திருநாவுக்கரசுக்கு உதவியாக இருந்த சேலத்தை சேர்ந்த அவரது தோழியிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த 2 நாட்களாக பொள்ளாச்சி பகுதியில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை ரகசிய இடத்திற்கு வரவழைத்து இந்த விசாரணை நடக்கிறது. திருநாவுக்கரசு மற்றும் கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளிகள் மீது தொலைபேசியில் பலர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு மற்றும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில், அதில் உண்மைதன்மை உள்ளதா என்பதையறிய, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victims ,CBCIT ,Pollachi ,camp victims , CBCID police , Pollachi ,investigating ,victims,camp victims
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!